பனை
அத்திசையில் ஒரு மரம் வயல் காட்டின் பனைமரம் கொத்துக்கொத்தாய் குலைதள்ளி வட்டுவரை காய்க்குமே ஊர்வாசலில் நின்றுபார்க்க ஊர்வாசலில் எட்டுமே பழுத்த பனம் பழம் பொறுக்க அடுத்தூரார் காத்திருப்பார் பொல்லாத கதைகட்டி அங்கு பேய் உலாவுதென சொல்லிவச்சார். என் ஊரின் நரியர் அப்பா அந்தப்பழம் பொறுக்கி சுவை கண்டார் ஆடுமாடு போனாலும் அது அடிக்கும் என்று பக்குவமாய் கதை அளந்தார் வயல்காட்டில் விதைக்கையிலே வரப்போறம் அடுப்பு வைச்சு கெண்டைமீன், கெழுத்திமீன் குஞ்சுத்திரழி பிடிச்சுவந்து அங்குதான் கூழாக்கி பனை ஓலை பிளாக்கோலி பரிமாறினோம் ஒற்றைப்பனை கள் இறக்கி கக்கத்தில் ஒழிச்சுவைத்து என் கூட்டுத்தோழருடன் நாம் குடிச்சோம். தேன் அமிர்தம் தோற்றுவிடும் அந்த ஒற்றைப்பனை கதைபேசும். பல ஞாபகங்கள் மீண்டுவரும் நாகதாழி பழம் பறிச்சு நடுமுள்ளு கைகிழிக்க என் வீட்டில் அப்பம்மா ஒப்பாரி வைப்பாள் என்று நாள் முழுக்க போகாமல் பனை நிழலில் படுத்திருந்த நினைவெல்லாம் ஞாபகம் என் நண்...